Suganthini Ratnam / 2010 நவம்பர் 15 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை பிரதேசத்திலுள்ள மொத்த, சில்லறை விற்பனை நிலையங்களில் பாவனையிலுள்ள அளவை நிறுவை உபகரணங்களையும் கருவிகளையும் இவ்வாரத்திற்குள் தகுதி நிர்ணய முத்திரை (சீல்) பதிக்குமாறு சகல வர்த்தகர்களுக்கும் அம்பாறை மாவட்ட அளவை நிறுவை பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.
சீலிடப்படாத நிலையில் வர்த்தகர்கள் அளவை நிறுவை உபகரணங்களையும் கருவிகளையும் பயன்படுத்துவதன் காரணமாக, பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும்போது பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே, காரைதீவிலுள்ள கூட்டுறவு சங்கத்தில் நாளை முதல் சீலிடும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது. அளவுகோல், தராசு, இலத்திரனியல் தராசு மற்றும் திரவ அளவை உபகரணம் என்பவற்றை சீலிட்டு கொள்ளுமாறு வர்த்தகர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.
5 minute ago
10 minute ago
34 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
34 minute ago
43 minute ago