2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஆப்கான் குண்டுத் தாக்குதலில் பிரதி மாகாண ஆளுநர் பலி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பிரதி மாகாண ஆளுநர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

காரில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த குண்டுத் தாக்குலில் அகப்பட்டு   பிரதி மாகாண ஆளுநர் மொஹமட் காஸிம் அல்லாஹ்யா உட்பட அவரது மகன் மற்றும் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன், இந்தத் தாக்குதலில் பாதசாரிகள் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இதுவொரு பாரிய குண்டுத் தாக்குதல் என்பதுடன், இரு வாகனங்களில் ஒன்றை வெடிக்கச் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .