2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவில் கடும் மழை; 6 வாரங்களில் 221 பேர் பலி

Suganthini Ratnam   / 2010 ஜூலை 12 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கில் அகப்பட்டு கடந்த ஜுன் மாதம் முதலாம் திகதியிலிருந்து 221 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், சுமார் 14,000 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் ஜுன் மாதத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் பருவக்காற்று மழை பெய்கின்றமை வழமையாகும்.

மீட்புப் பணிகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .