2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தமிழ்நாட்டின் 33 ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது’

Editorial   / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுடன் தொடர்பில் இருந்ததாக இதுவரை இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 பேர் உட்பட 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய விசாரணை முகவரகத்தின் தலைவர் அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெற்ற பயங்கரவாதத்துக்கெதிரான முகவரகங்களின் மாநாடொன்றிலேயே மேற்படி கருத்தை வெளிப்படுத்தியிருந்த அலோக் மிட்டல் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருந்ததாக நாடு முழுவதும் இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 பேர், உத்தரப் பிரதேசத்தில் 19 பேர், கேரளாவில் 17 பேர், தெலுங்கானாவில் 14 பேர் என மொத்தம் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் சஹ்ரான் ஹாசிம் என்ற ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதி முக்கிய குற்றவாளியாக இருந்தார். அவருடன், கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் தொடர்பில் இருப்பது சஹ்ரான் சம்பந்தப்பட்ட காணொளியில் தெரிந்தது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்பில் இருப்போரை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவர்” என்று கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X