Editorial / 2020 ஜனவரி 07 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குரஸ்ஸ- தெனியாய பிரதான வீதியில் இன்று (7) பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 வைத்தியர்கள் உள்ளிட்ட ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான வானொன்றும் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் மொரவக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக காலி- கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சுக்கு சொந்தமான குறித்த வான், தெனியாய வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டமொன்றை கண்காணிப்பதற்காகச் சென்று திரும்பும் வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025