Editorial / 2019 நவம்பர் 22 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.ஏ. காதிர்கான்
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள சு.கவின் மத்திய கொழும்பின் முன்னாள் அமைப்பாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுடமான பைஸார் முஸ்தபா, சிறுபான்மை சமூகத்தினரது உரிமைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் பிரதமர் மதிப்பளித்து, அவற்றைப் பெற்றுக்கொடுப்பார் என்று நம்புவதாகவும் கூறினார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
நாட்டின் மிகவும் தீர்மானமிக்க சூழல், புதிய பிரதமரின் ஆட்சிக்குள் வரவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் பெருபான்மை சமூகத்துக்கு முக்கியத்துவம் வழங்குவதைப் போன்றே, சிறுபான்மையினருக்கும் முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்பதே, தங்களது எதிர்பார்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூவின மக்களுக்கு இடையேயும் சமாதானம் நிலவும் இலங்கையைக் கட்டியெழுப்புவார் என்பது தங்களது எதிர்பார்ப்பு என்றும் புதிய பிரதமர் ஊடாகக் கிடைத்த இந்த வெற்றியில், தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் பங்காளிகளாக இருந்து அவரது கரத்தைப் பலப்படுத்தவேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
43 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
3 hours ago
4 hours ago