2025 ஜூலை 05, சனிக்கிழமை

காதலியின் கணவர் கொலை; டுபாயில் இலங்கையருக்கு மரண தண்டனை

Super User   / 2010 ஜூன் 14 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலியின் கணவரை படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு டுபாய் மேன்முறையீட்டு நீதவான் எய்சா சாரீப் மரண தண்டனை விதித்துள்ளார்.
 
24வயதுடைய மேற்படி இலங்கையருக்கு முன்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததாகவும், மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை பரிசீலனை செய்த நீதவான்கள் ஆயுள் தண்டனையை ரத்து செய்து மரண தண்டனை விதித்துள்ளதாகவும் மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
நபர் ஒருவரை படுகொலை செய்த குற்றத்திற்காக அந்நாட்டு உயர் நீதிமன்றம் குறித்த நபருக்கு முன்னர் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.
 
ஆபிரிக்கர் ஒருவரினால் தமது கணவர் படுகொலை செய்யப்பட்டதாக கொலையுண்டவரின் மனைவி முதலில் வாக்கு மூலம் அளித்த போதிலும், தீவிர விசாரணைகளின் பின்னர் தமது காதலரே கணவரை படுகொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
 
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த டக்ஸி சாரதி ஒருவரின் வாக்கு மூலத்தை அடிப்படையாகக் கொண்டே குற்றவாளிக்கு நீதிமன்றத்தினூடாக தணடணை பெற்றுக்கொடுக்கப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .