2025 ஜூலை 03, வியாழக்கிழமை

களு, நில்வள கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு

Thipaan   / 2016 மே 28 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக, களுகங்கை, நில்வள கங்கை மற்றும் அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

களுகங்கையின் மிலகந்த, படுபவுல மற்றும் நில்வள கங்கையின் பனடுகம மற்றும் அத்தனகல ஓயாவின் டுனமலே பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நீர்வரப்பு அதிகமாகக் காணப்படின் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு, பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .