Princiya Dixci / 2017 மே 18 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், வெசாக் தோரணங்களும் விழுந்துள்ளமையினால், போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பலத்த காற்று மற்றும் மழையால் மரமொன்று முறிந்து விழுந்ததில், கொழும்பு - லோடஸ் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு - டெலிக்கொம் மத்திய நிலையத்துக்கு அருகில், மருதானை டாலி வீதியின் தீயணைப்புப் பிரிவுக்கு அருகில், புறக்கோட்டை - ட்ரக்டர் கூட்டுத்தாபன சந்தி போன்ற பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
இதேவேளை, கடும் மழையின் காரணமாக, கிரிபத்கொடையில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் தோரணமொன்று சரிந்து விழுந்துள்ளது.
குறித்த வெசாக் தோரணம் இடிந்து விழுந்ததில் 4 வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளன.
சீரற்ற வானிலை தென்படுவதாதால், வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு, போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர.
55 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025