Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2017 மே 25 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரத்துபஸ்வல பிரதேசத்தில், குடிநீர் கோரிப் போராடிய பிரதேசவாசிகள் மீது தாக்குதல் நடத்த ஆணை பிறப்பித்ததாகக் குறிப்பிடப்படும் இராணுவ உயரதிகாரியான பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றிருந்த போதே, அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவரை, கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
மேற்படி விவகாரம் தொடர்பில், இராணுவத்தைச் சேர்ந்த நால்வர், ஏற்கெனவே கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .