2025 ஜூலை 05, சனிக்கிழமை

நாட்டில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் கொல்லப்பட்ட வருடம் 2019

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் இலங்கையில் அதிக எண்ணிக்கையில் யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 

கடந்த வருடத்தில் மாத்திரம் 361 யானைகள் உயிரிழந்துள்ளன.

இலங்கையில் சுமார் 7,500 காட்டு யானைகள் உள்ளன. அவற்றைக் கொல்வது சட்டபடி குற்றம். 

இருப்பினும் யானைகள் கிராமப்புறச் சமூக மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் நிலை காணப்படுகின்றது.

மின்-தடுப்புகள், நஞ்சு, வெடிபொருள் ஆகியவற்றைக் கொண்டு யானைகள் கிராமப்புற மக்களால் கொல்லப்படுகின்றதுடன், தந்தங்களுக்காக வேட்டையாடப்படும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .