Editorial / 2020 மார்ச் 12 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் வௌிநாட்டுப் பயணிகளுக்கு வழங்கும் உடனடி விசாவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (11) விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு தரப்பினர், உயரதிகாரிகள், சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
1 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 Jan 2026