2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மினி சூறாவளியால் மொரட்டுவையில் 30 வீடுகள் சேதம்

Menaka Mookandi   / 2016 ஜூலை 15 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவ, கொரளவெல்ல பிரதேசத்தில், இன்று வெள்ளிக்கிழமை (15) காலை வீசிய மினி சூறாவளி காரணமாக, சுமார் 30 வீடுகள் சேதமடைந்துள்ளன.

அத்துடன், அப்பிரதேசத்தின் மின்சார கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.  

சம்பவத்தை அடுத்து, அப்பிரதேசத்துக்குச் சென்ற இடர் முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியுள்ளதுடன், மின் விநியோகத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, மின்சார சபை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .