2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ரஞ்சனை விடுதலை செய்யக்கோரி போராட்டம்

Nirosh   / 2021 ஜனவரி 23 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழியச் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்காவின் விடுதலையை வலியுறுத்தி, நீர்கொழும்பில் இன்று(23) மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவின் ஏற்பாட்டில் நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் அருகில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைதியாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா, கலைஞர்கள், இரசிகர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .