2025 ஜூலை 09, புதன்கிழமை

4 எஸ்.எஸ்.பிகள் மற்றும் 5 எஸ்.பிகள் இடமாற்றம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நால்வரும் பொலிஸ் அத்தியட்சகர் ஐவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரிலேயே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

                                                   அறிவிக்கப்பட்ட இடமாற்றங்கள்

பொலிஸ் அத்தியட்சர்:
அஜித ரோகண
அம்பாறை பிரிவு பொறுப்பதிகாரி
இவர் பொலிஸ் பொதுமக்கள் உறவுகள் மற்றும் ஊடக இணையப் பிரிவு பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிரேஸ்ட பொலிஸ்
அத்தியட்சர்:        ஆர்.மு.டீ.மஹகெதர
நுவரேலிய பிரிவு பொறுப்பதிகாரி.
இவர் அம்பாறை பிரிவு பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர்:   எஸ்.சி.மடவத்த    மாத்தளை பிரிவு பொறுப்பதிகாரி.
இவர் தேசிய பொலிஸ் அக்கடமியின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர்:    கே.பி.பாலித பெர்னர்டோ கொழும்பு மோசடி புலனாய்வு பணியக பணிப்பாளர்.
இவர் மாத்தளை பிரிவு பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அத்தியட்சர்: ஜி.எம்.எச்.பீ.சிரிவர்த்தன பொலிஸ் பொதுமக்கள் நல்லுறவு மற்றும் ஊடக இணையப் பிரிவு பணிப்பாளர்.
இவர் பண்டாரவளை பிரிவு பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அத்தியட்சர்: ஜி.ஐ.டி.ஆர்.விஜேசிங்க பண்டாரவளை பிரிவு பொறுப்பதிகாரி
இவர் மாங்குளம் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அத்தியட்சர்: எஸ்.எ.அபேவிக்ரம புத்தளம் பிரிவு பொறுப்பதிகாரி.
இவர் நுவரேலிய பிரிவு பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அத்தியட்சர்: பி.ஆர்.எஸ்.ஆர்.நகஹமுல்ல குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரி.
இவர் புத்தளம் பிரிவு பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அத்தியட்சர்: கெ.ஜி.எ.அல்விஸ் கொழும்பு மோசடி புலனாய்வு நிறுவக அதிகாரி.   
இவர் நிரந்தர பணிப்பாளராக நியமிக்கப்படும்வரை கொழும்பு மோசடிவ விசாரணை பணி  யகத்தின் பதில் பணிப்பாளராக டமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .