Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
“எமது வருடமும் - எமது குரலும்” என்ற தொனிப்பொருளின் கீழ் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்தமன்றத்தின் கீழியங்கும் பிரஜாசக்தி நிலையங்களில் இன்று முதல் இளைஞர்தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்று பிரஜாசக்தி முகாமையாளர் பி.நகுலேந்திரன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்தமன்றத்தின் கீழியங்கும் பிரஜாசக்தி நிலையங்களில் ஒவ்வொரு வருடமும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்தின நிகழ்வுகள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் இவ்வருடத்தின் தொனிப்பொருளான “எமது வருடமும் - எமது குரலும்” என்பதற்கு அமைவாக இளைஞர்தின நிகழ்வுகள் நாடெங்கிலுமுள்ள 44 பிரஜாசக்தி நிலையங்களிலும் இன்று 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இம்மாதம் முழுவதும்
பின்வரும் கருப்பொருளுக்கு அமைவாக இடம்பெறவுள்ளது.
தற்கால இளைஞர் யுவதிகள், சமுகத்தினர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஊடகத்துறையினரின் பங்களிப்பு , இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்குமிடையில் புரிந்துணர்வை விருத்தி செய்தல் தொடர்பான வட்டமேசை கலந்துரையாடல் , இளைஞர்களுக்கிடையிலான விவாத போட்டிகள் ஆகியன மேற்குறிப்பிட்ட தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளன.
மேற்குறிப்பிட்டுள்ள தொனிப்பொருளுக்கமைவாக சித்திரப் போட்டிகள், கண்காட்சிகள் மற்றும் பிரஜாசக்தி நிலையங்களுக்கு ஊடாக அப்பிரதேச இளைஞர்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.
இனிவரும் காலங்களில் “எமது வருடமும் - எமது குரலும்” என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக சகல ஊடகத்துறையினருடனும் இணைந்து பிரஜாசக்தி நிலையங்கள் செயல்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
34 minute ago
46 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
46 minute ago
56 minute ago