Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 06 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக, ஒன்பது சுயாதீனக் குழுக்கள், கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.
வன்னி, யாழ்ப்பாணம், களுத்துறை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களிலேயே, இந்தச் சுயாதீனக் குழுக்கள், கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.
வன்னி தேர்தல் தொகுதிக்காக நாமல் லியனபத்திரண, நீல் சாந்த, எம்.பி.நடராஜா ஆகியோர், சுயாதீனக் குழுக்களாகக் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மயில்வாகனம் விமல்தாஸ், ஐங்கரநேசன் பொன்னுதுறை, விக்டர் அன்டனி வில்லியம்ஸ் ஆகியோர் தலைமையிலான மூன்று சுயாதீனக் குழுக்கள், கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில், உடவத்தகே மஹிந்த சில்வா என்பரின் சுயாதீனக் குழு, கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து, ரம்ழான் மொஹமட் இம்ரான், அசனார் மொஹமட் அஸ்மி ஆகியோர், தங்களுடைய சுயாதீனக் குழுக்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .