நாயை விரும்பும் கணவன் வேண்டும்: திரிஷா
வியாழக்கிழமை, 08 டிசெம்பர் 2011 08:41
.jpg)
நடிகை திரிஷா என்றாலே வித்தியாசமானவர் என்ற பார்வை சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ஏன்? எப்படி? எதற்காக? என்ற கேள்விகளை திரிஷாவின் விடயத்தில் நாங்கள் எதிர்பார்க்க முடியாது. காரணம், அடிக்கடி தான் சொல்வதையே மாற்றிச் சொல்பவர் நடிகை திரிஷா.
அண்மைக்காலத்தில் திரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தங்கள் நடைபெறவிருக்கின்றன என்ற செய்தி பரவலாக அடிபட்டது. அதற்கு முன்னர், பல தொழிலதிபர்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர். அதுமட்டுமல்லாமல் தாராள விருந்துகளை வழங்குவதிலிலும் திரிஷா பேர்போன புள்ளி என்ற செய்தியும் இல்லாமல் இல்லை.
பத்தோடு பதினொன்றாக தோன்றும் துணை நடிகை வேடத்தில் நடிக்கத் தொடங்கி, இன்று முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்தினை தக்கவைத்திருப்பதென்பது சாதாரண விடயமல்ல. இருந்தபோதிலும் பல இளம் நடிகைகளின் வருகையினால் திரிஷாவின் மார்க்கட்டும் இறங்கித்தான் போயிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான் திரிஷா தன்னுடைய திருமணம் சம்பந்தமான அறிக்கைகளை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார். தனக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்று அறிவித்தால், அதற்கிடையில் படத்தில் எப்படியாவது நடிக்க வைக்கவேண்டும் என பல தயாரிப்பாளர்கள் முண்டியடிப்பர் என்பது திரிஷாவின் தந்திரம். இதனைத்தான் அண்மைக்காலமாக அரங்கேற்றி வருகிறார்.
இப்பொழுது தன்னுடைய திருமணம் பற்றி வேறு ஒரு கருத்தினை முன்வைத்திருக்கிறார். 'நான் மிருகங்களை அதிகம் நேசிப்பவள். என்னுடைய வீட்டில் ஏராளமாக நாய்கள் இருக்கின்றன. இவற்றினை அன்பாக கவனிக்கக்கூடிய ஒருத்தர்தான் எனக்கு கணவராக அமையவேண்டும் என காத்திருக்கிறேன்...' என திரிஷா கூறியிருக்கிறார்.
ஆக, நாய்களுடன் அன்பாக பழகக்கூடிய தொழிலதிபர்கள் திரிஷாவினை கரம்பிடிப்பது பற்றி சிந்திக்கலாம். நம்நாட்டிலும் இத்தகைய தகைமையுடையவர்கள் திரிஷாவிற்கு விண்ணப்பம் அனுப்பிப் பார்க்கலாமே..!!
.jpg)
.jpg)
.jpg)

written by ala, December 08, 2011
written by SSSSSSSSSSO, December 11, 2011
யாழ்ப்பாண செய்திகள்
வடமேல் , வடமத்தி
தென் மாகாணம்
மேல் மாகாணம்
அம்பாறை செய்திகள்
மலையக செய்திகள்
மட்டக்களப்பு செய்திகள்
திருகோணமலை செய்திகள்
பிரசித்தமான செய்திகள்
21-02-2012 11:45 PM Hits:1023
|
22-02-2012 03:14 PM Hits:823
|
.jpg)
.jpg)
