2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

அனைத்து ஆவணங்களையும் யாழுக்கு கொண்டுவருமாறு உத்தரவு

Niroshini   / 2021 மார்ச் 17 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜித்தா

யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் அனைத்தையும் யாழிற்கு மீண்டும் கொண்டு வர வேண்டுமென, கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த  அளுத்கமகே உத்தரவிட்டார்.

இதையடுத்து,காணி ஆவணங்கள் அனைத்தும் யாழ்ப்பாணத்துக்கு உடனடியாக எடுத்து வரப்பட்டன.
கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி யாழ்.மாவட்ட செயலகத்தில் , இன்று (17) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது, காணி தொடர்பான கலந்துரையாடல் வரும் போது, யாழ்ப்பாணத்தில் இருந்து, ஏனைய இரு மாவட்டங்களுக்குமுரிய காணி ஆவணங்கள் அனைத்தும் கடந்த வாரம் இரவோடு இரவாக கொண்டு செல்லப்பட்டதாக, அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அநுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட அனைத்து காணி ஆவணங்களையும் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வருமாறு உத்தரவிட்டதுடன், எவ்வாறு யாழ்ப்பாணத்து மக்கள் அநுராதபுரத்திற்குச் சென்று காணி ஆவணங்கள் தொடர்பாக தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமென்றும் கேள்வி எழுப்பினார்.

சில அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள்,மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X