2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலங்கையைப் பாராட்டினார் பிரிட்டன் பிரஜை

Editorial   / 2020 மார்ச் 29 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸுக்கு எதிராக போராடுவதற்கு, பிரட்டனை விட இலங்கை நன்றாகத் திட்டமிட்டுள்ளது என, இலங்கைக்கு சுற்றுலா வந்த பின்னர் பிரிட்டனுக்குத் திரும்பிய சுற்றுலாப் பயணியொருவர், அங்குள்ள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

பிரட்டனுடன் ஒப்பிடும்போது, இலங்கையின் ஏற்பாடுகள் நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றுலாப்பயணி, மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்திருந்தார் என்றும் இரண்டு வாரங்கள் இலங்கையில் தங்கியிருந்துள்ளார் என்றும் தெரியவருகின்றது.

அவர் பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு வரும்போதே, விமானத்துக்குள் வைத்து, தங்களைப் பற்றிய விவரங்களை நிரப்புமாறு ஒரு படிவம் வழங்கப்பட்டது என்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும்போது, அங்கிருந்த விமானநிலைய அதிகாரிகள், தங்களைப் பற்றிய அனைத்துத் தரவுகளையும் அறிந்து வைத்திருந்தனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், விமான நிலையத்தில் இருந்து தங்களுடைய ஹோட்டலுக்குச் செல்வதற்கு முன்னர், பல இயந்திரங்கள் பல பரிசோதனைகள் தனக்கு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X