2026 ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை

புதிய அரசமைப்பு வரைவு புதனன்று சமர்ப்பிக்கப்படும்

Editorial   / 2018 ஜூலை 16 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் புதன்கிழமையன்று (18) கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

தற்போதுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் உப பிரிவு 6இன் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, மேற்படி புதிய அரசமைப்பின் வரைவு தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக,

அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில், பல்வேறு கட்சியினர் வழங்கிய யோசனைகள் அடங்கிய குறிப்பொன்றும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டார்.  

இந்த வரைவானது, புதிய அரசமைப்பு தொடர்பில், இனிவரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடலுக்குத் தேவையான ஆவணமாக மாத்திரமே பயன்படுத்தப்படுமென, அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.      


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .