Super User / 2010 ஜூலை 10 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர் விமல் வீரவன்ஸவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் நேரில் பார்வையிட்டார்.
அதையடுத்து விமல் வீரவன்ஸவுக்கு நீர் அருந்தக்கொடுக்கப்பட்டதுடன் அவர் அம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.
இலங்கை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு நியமனத்திற்கு எதிராக, கொழும்பு ஐ.நா. செயலகத்திற்கு முன்னால் கடந்த வியாழக்கிழமையிலிருந்து அமைச்சர் விமல் வீரவன்ஸ உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (R.A)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .