2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

CCTV கெமராவை சேதப்படுத்தியோர் மீது நடவடிக்கை

Editorial   / 2020 பெப்ரவரி 27 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி பல்கலைக்கழகத்தில் சி.சி.டி.வி கெமராவை சேதப்படுத்திய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை களனி பல்கலைக்கழகத்தின் CCTV கெமராவை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அகற்றியிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X