Thipaan / 2016 ஜூலை 13 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், பொன் ஆனந்தம்
திருகோணமலை அபயபுர ஆரம்ப பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையையும் வளப்பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்து தருமாறு கோரி, திருகோணமலை மாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால், இன்று புதன்கிழமை (13) ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
நூற்றுக்கணக்கான பெற்றோர்களும் மாணவர்களும் சுலோகங்களை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர்.
பின்தங்கிய பிரதேசத்தில் காணப்படும் இப்பாடசாலையில், போதுமான ஆசிரியர்கள் இல்லாமையாலும் வளங்கள் இன்றியும் அதிகாரிகள் புரக்கணிக்கப்பட்டு வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .