2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரி நாளை ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நஷ்டஈட்டை அரசாங்கம்  வழங்க வேண்டுமெனக்  கோரி விவசாயிகள் நாளை திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளனர்.

கந்தளாய் பிரதேச செயலாளர் அலுவலகத்தின் முன்னால் நாளை திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு இவ் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

கங்கதளாவ விவசாயிகள் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டம், அமைப்பின் தலைவர் முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜயசேகர  தலைமையில் இது நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X