Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 13 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (13) நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், பாதுகாப்பு பணியாளர்களின் பிரதானியான (சிடீஎஸ்), கடற்படை முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன விவகாரம் தொடர்பிலேயே ஆராயப்படவிருக்கின்றது என தகவல் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுக்கு விஜயம் செய்துள்ள, பாதுகாப்பு பணியாளர்களின் பிரதானியான, கடற்படை முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன, நாடு திரும்பியதும், அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு நேற்று (12) கொண்டுவந்திருந்தனர்.
இந்த விசேட கூட்டத்தில் பங்கேற்குமாறு, சகல அமைச்சர்களுக்கும், நேற்று (12) பகல், தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலான வழக்கில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த “நேவி சம்பத்” என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சி என்பவர், மறைந்திருப்பதற்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டு தொடர்பில் அவரை சி.ஐ.டியினர் விசாரணைக்கு உட்படுத்தவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
42 minute ago
1 hours ago
2 hours ago