2025 ஜூலை 12, சனிக்கிழமை

கோட்டையில் போராட்டம்...

Menaka Mookandi   / 2011 நவம்பர் 30 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணிக்கு சார்பான சோசலிச இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று கொழும்பு, கோட்டையில் இன்று புதன்கிழமை மாலை நடத்தப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் நிதி அமைச்சு வளாகத்துக்குள் உட்புக முயற்சித்ததை அடுத்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றது. இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைக்குண்டு பிரயோகங்களையும் மேற்கொண்டனர்.

இதனால் கொழும்பு, கோட்டை பகுதியில் சில மணி நேரங்களுக்கு பாரிய வாகன நெரசலும் ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோரையும் அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டத்தையும் படங்களில் காணலாம். Pix By :- Samantha Perera

 


You May Also Like

  Comments - 0

  • avathaani Thursday, 01 December 2011 04:09 AM

    மாரி கால தவளைகளின் கூச்சலுக்கு மசியுமா மகி அரசு?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .