Editorial / 2018 ஜூலை 04 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுராதபுரம் மெதிரிகிரிய யாய-3 பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து, இராணுவச் சீருடைகள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளனவென, பொலிஸார் தெரிவித்தனர்.
ரி-56 ரக தன்னியக்க துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ரவைகளுடன் கூடிய மெகஷின்கள்-5, கைக்குண்டுகள்-03, காட்டுச் சீருடை, பாதணிகள், பூட்ஸ் ஆகியனவே கைப்பற்றப்பட்டுள்ளன.
கிடைக்கப்பட்ட தகவலையடுத்து இராணுவத்தினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையிலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளனவென தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இராணுவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் என்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .