2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

ஒரு ​போட்டியில் இரு சாதனைகள்

Kamal   / 2019 செப்டெம்பர் 07 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச இருபதுக்கு இருபது போட்டியொன்றில் அடுத்தடுத்த 4 பந்துகளில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை இலங்கை டீ - 20 அணியிண் தலைவர் லசித் மாலிங்க பெற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று (06) கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற 3 ஆவது டீ - 20 போட்டியின் போது நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நால்வரை தொடர்ச்சியாக ஆட்டமிழக்கச் செய்தே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

அத்துடன், நியூசிலாந்து அணியின், கொலின் முன்ட்ரோவை ஆட்டமிழக்ச் செய்ததன் மூலம் டீ -20 போட்டிகளில் அதிக விக்கட்டுக்களை (100) வீழ்த்தியுள்ள வீரர் என்ற இலக்கையும் மாலிங்க அடைந்துள்ளார்.

 

இதற்கு முன்னர் இவர் ஒருநாள் போட்டியொன்றில் தென்னாபிரிக்க வீரர்கள் நால்வரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்மிழக்கச் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X