Super User / 2011 ஜனவரி 10 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
தென்னாபிரிக்க அணியுடனான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 21 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
டர்பன் நகரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ஓட்டங்களைப் பெற்றது. ரோஹித் சர்மா 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 5 பௌண்ரிகள் உட்பட 53 ஓட்டங்களைப் பெற்றார்.சுரேஷ் ரெய்னா 23 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 2 பௌண்டரிகள் உட்பட41 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரக்க அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மோர்ன் வான் வெய்க் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடினார். 39 பந்துவீச்சுகளில் 5 சிக்ஸர்கள் 5 பௌண்டரிகள் உட்பட 67 ஓட்டங்களை அவர் குவித்தார்.
எனினும் ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். வான் வெய்க்கிற்கு அடுத்ததாக ஜொஹான் போத்தா 25 ஓட்டங்களைப் பெற்றார். 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களையே தென்னாபிரிக்க அணி பெற்றது.
ரோஹித் சர்மா இப்போட்டியின் சிறப்பாட்டக் காரராகத் தெரிவானார்.
தென்னாபிரிக்க பந்துவீச்சாளர் மெகாயா நிதினி இப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
31 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago
57 minute ago
1 hours ago