ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஜூலை 21 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}



மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள இருநூறுவில் துர்க்கா பாலர் பாடசாலை மற்றும் இருநூறுவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, உதவும் கரங்கள் அமைப்பால் கற்றல் உபகரணங்கள், நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
பிரான்ஸ் தமிழ் மக்கள் உதவும் அமைப்பின் நிதியுதவியுடன், கடந்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வறுமை நிலையிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
உதவும் கரங்கள் அமைப்பின் தொண்டரான கே.லோகிதகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகளான எஸ்.மகேந்திரநாதன், ஏ.மனோகரன், எஸ்.சுபகணேஸ் போன்றோர் உடனிருந்து மாணவர்களுக்கு வழங்கிவைத்தனர்.
5 hours ago
9 hours ago
9 hours ago
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago
22 Nov 2025