2025 ஜூலை 10, வியாழக்கிழமை

உதவியற்ற முதியோர்களை பராமரிக்கும் வீட்டு பராமரிப்பு தொண்டர்களுக்கான பயிற்சி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

ஹெல்பேஜ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் கிழக்குப் பிராந்திய அலுவலகத்தின் ஊடாக கல்முனை கிறிஸ்தவ இல்லத்தில் உதவியற்ற முதியோர்களை பராமரிக்கும் வீட்டு பராமரிப்பு தொண்டர்களுக்கான ஐந்து நாள் வதிவிடப் பயிற்சி ஹெல்பேஜ் ஸ்ரீலங்காவின் தலைமைக் காரியாலயத்தின் உதவி பயிற்சி முகாமையாளர் குமாரி பாலம்மகும்பிறவின் தலைமையில நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளம் போன்ற மாவட்டங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட வீட்டு பராமரிப்பு தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் இங்கு பெற்ற இப்பயிற்சிநெறியை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டங்களை வகுத்துள்ளோம் என ஹெல்பேஜ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் கிழக்குப் பிராந்திய திட்டமுகாமையாளர் ரீ.டி.பத்மபைலநாதன்  தெரிவித்தார்.
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .