Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 06 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
குடும்பப் பிணக்கு காரணமாக தனது அண்ணனின் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டவர், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய நிலையில் நேற்று மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு குற்றப்புலன் விசாரணைப் பிரிவுத் தகவல் தெரிவிக்கின்றது.
1996ஆம் ஆண்டு குடும்பப் பிணக்கு காரணமாக இவர் தனது அண்ணனின் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில், மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தீர்ப்பிற்கு சமூகமளிக்காமல் இவர் வெளிநாடு சென்றிருந்தார்.
இந்நிலையில், கடந்த 2ஆம் திகதி நாடு திரும்பிய சந்தேகநபர் நேற்று புதன்கிழமை, மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு மேல் நீதிமன்றில் இன்று ஆஜர்செய்த போது ஏற்கனவே ஆளில்லாத போது வழங்கப்பட்ட தீர்ப்பினை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago