2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வட, கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகஸ்தர் சங்க கூட்டம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,-கே.எல்.ரி.யுதாஜித்

வடக்கு, கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகஸ்தர் சங்கத்தின் 05ஆவது பேராளர் மாநாடும் வருடாந்த பொதுக்கூட்டமும்  திங்கட்கிழமை (09)  மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் உதயகுமார்,  கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி அசீஸ், வடக்கு, கிழக்கு மாகாண அரசாங்க உத்தியோகஸ்தர் சங்கத்தின் தலைவர் தினேஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சங்கத்தின் தலைமைச் செயலக புதிய நிர்வாகமும் மட்டக்களப்பு மாவட்டத்துக்;கான புதிய நிர்வாகங்களும் தெரிவுசெய்யப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X