Niroshini / 2016 ஜூலை 16 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் முச்சக்கரவண்டியொன்று 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி காயங்களுக்குள்ளான நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த முச்சக்கர வண்டி அப்புத்தளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த வேளையில், ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் வைத்து பாதையை விட்டுவிலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனமே இவ்விபத்துக்கான காரணம் என்று வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
4 minute ago
32 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
32 minute ago
57 minute ago