Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜனவரி 13 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
அக்குறணை, மல்வானஹின்னை பிரதேசத்தில் புதையல் தோண்டிய இருவரை நேற்று இரவு அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். மல்வானஹின்னை ஓடை ஒன்றிற்கு அருகாமையில் சுமார் நான்கு மாதங்களாக இப்புதையல் தோண்டும் செயல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பூமியில் 40 அடி வரை ஆளத்திற்கு இது தோண்டப்பட்டுள்ளதாகவும் இதனால் அருகிலுள்ள நான்கு வீடுகள் கீழ் இறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுடன் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள் பூஜைக்காக பயன்படுத்தும் உபகரணங்கள் நீரை வெளியே எடுப்பதற்காக பயன்படுத்தும் உபகரணங்கள் வாழை மரத்துண்டுகள் உட்பட பல உபகரணங்கள் கண்டெடக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று கண்டி நீதவான் முன் ஆஜர் செய்யவுள்ளதாக அலவத்துகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
31 minute ago
54 minute ago