2025 ஒக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை

பூஜாபிட்டிய பிரதேசசபையில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுபவரின் காரியாலயம் சேதம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பூஜாபிட்டிய பிரதேசசபைக்காக சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் அனுர ஹேரத் என்பவரின் காரியாலயம் நேற்று புதன்கிழமை இரவு  இனந்தெரியாத நபர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கும்புரை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


தனது காரியாலயத்தின் பெயர்ப்பலகை, தனது சின்னம் மற்றும் இலக்கங்கள் குறிக்கப்பட்ட பதாதைகள் ஆகியன உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் அனுர ஹேரத் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.


இச்சம்பவம் தொடர்பில் அங்கும்புரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்துகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .