Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி, மஹியங்கனை ஏ - 26 வீதியில் இடம்பெறவுள்ள திருத்த வேலைகள் காரணமாக நேற்று திங்கட்கிழமை முதல் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக வீதி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இவ்வீதி இதற்கு முன்னர் ஒருமுறை திருத்த வேலைக்காக மூடப்பட்டபோதிலும், மக்களின் ஆர்ப்பாட்டத்தினால் தற்காலிகமாக திறக்கப்பட்டது.
இவ்வீதிக்கு பதிலாக விக்டோரியா ரந்தெனிகலை வழியாக மஹியங்கனை செல்லும் வீதியை பயன்படுத்துமாறும் பொதுமக்களிடம், வீதி அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
இருப்பினும் இவ்வீதியும் ரந்தெனிகலை நீர்தேக்கத்திற்கு அருகில் கீழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கவுள்ளதால் வாகனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வீதி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .