Editorial / 2019 நவம்பர் 14 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் இன்று (14) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கைதடி, நுணாவில் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில், மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தரை டிப்பர் வாகனம் மோதித்தள்ளியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றது.
குருநகர், கனகசிங்கம் வீதியை சேர்ந்த எம்.லக்கி (42) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தார்.
தனியார் பாதுகாப்பு சேவையின் மேற்பார்வையாளரான இவர், நிறுவன காவல் கடமைகளை மேற்பார்வை செய்ய இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோதே விபத்து நேர்ந்தது.
-எம்.றொசாந்த்
39 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
7 hours ago