Princiya Dixci / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ். கோண்டாவில் டிப்போப் பகுதியில் இலங்கைப் போக்குவரத்துச் சபையினருக்கும் தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்களுக்கும் இடையில் இடம்பெற்;ற கைகலப்பு சம்பவத்தில் தனியார் பஸ் நடத்துனர் காயங்களுக்குள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை (10) காலை, புன்னாலைக்கட்டுவனிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் கோண்டாவில் டிப்போ வாசலில் மறித்து அதில் நின்ற பயணிகளை ஏற்றியுள்ளனர்.
இதனால் கோண்டாவில் டிப்போ சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் அந்த தனியார் பஸ் சாரதி, நடத்துனருடன் தக்கர்த்தில் ஈடுபட்டதுடன், தனியார் பஸ் நடத்துனரைத் தாக்கியுள்ளனர்.
இதன்போது நடத்துனர் காயங்களுக்குள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, கோப்பாய் பொலிஸார் கோண்டாவில் டிப்போ சாரதியொருவரைக் கைதுசெய்துள்ளனர்.
52 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
7 hours ago