Editorial / 2020 ஜனவரி 06 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
யாழ்ப்பாணம் மாநகர சபை பிரிவில், விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, இத்திட்டம், நாளை (07), வியாழக்கிழமை (09), சனிக்கிழமை (11) ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை (07), நாவாந்துறையிலும் வியாழக்கிழமை (09) வண்ணார்ப்பண்ணையிலும் சனிக்கிழமை (11) குருநகரிலும் கள விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இம்முறை, டெங்கு நுளம்புப் பெருக்கத்துக்கு சாதகமான நிலைமைகள் காணப்படும் அனைத்து அரச, தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், வீடுகள், மண்டபங்கள், கோவில்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, யாழ்ப்பாணம் மாநகர சபை தெரிவித்துள்ளது.
8 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
50 minute ago