George / 2016 மார்ச் 23 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் சித்தங்கேணிப் பகுதியில் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவியை கடத்திச் சென்ற இருவரை மடக்கிப் பிடித்த அப்பகுதி இளைஞர்கள், மாணவியை மீட்டதுடன் கடத்திய இருவரையும் வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் செவ்வாய்க்கிழமை (22) ஒப்படைத்தனர்.
மேற்படி மாணவி, சித்தங்கேணி பகுதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு சென்றுவிட்டு வீடு செல்வதற்காக சித்தங்கேணி சந்தியிலிருந்து பஸ்ஸில் ஏறியுள்ளார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், மாணவியை பஸ்ஸில் இருந்து இறக்கி மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றனர்.
மாணவி முரண்டு பிடித்து தப்பிச்செல்ல முயன்றபோது, கடத்தியவர்கள் மாணவியை தாக்கியுள்ளனர். இதன்போது, மாணவி தன்னைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார்.
இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள், கடத்திச் சென்றவர்களை பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்ததுடன் மாணவியை மீட்டுள்ளனர்.
அதனையடுத்து மாணவி, கடத்திய இருவரும் வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் நவாலிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பிரதான சந்தேகநபர், வெதுப்பக வாகனத்தின் சாரதியெனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் கூறினர்.
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago