Editorial / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளராக நியமிக்கக் கோரி, மூன்றாவது மக்கள் கூட்டத்தை, எதிர்வரும் 5ஆம் திகதி, குருநாகலில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த 27ஆம் திகதி இரவு 7 மணி முதல், அதிகாலை 1.30 மணி வரை, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .