Editorial / 2019 செப்டெம்பர் 05 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத் தொடுவாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி புனரமைக்கென கொட்டப்பட்ட கிரவல் மண்ணில் இருந்து, கைக்குண்டொன்று, நேற்று (04) மாலை மீட்கப்பட்டுள்ளது.
கிரவல் மண்ணைப் பரவும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், மண்ணில் கைக்குண்டு காணப்பட்டதை அவதானித்து, அது தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த பகுதிக்கு தற்காலிக பொலிஸ் பாதுகாப்பை வழங்கி, கைக்குண்டை மீட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .