Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Princiya Dixci / 2015 ஜனவரி 28 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆர்.ரஸ்மின்
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் சுகாதார தொண்டர்களாகக் கடமையாற்றும் ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு புதன்கிழமை (28) முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், மல்லாவி, புதுக்குடியிருப்பு ஆகிய வைத்தியசாலைகளில் 1995ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சுகாதார தொண்டர்களாக கடமையாற்றி வரும் 63 ஊழியர்களே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது சுகாதார தொண்டர்கள், 'புதிய அரசே எங்களுக்கு நிரந்தர நியமனத்தை அவசரமாக வழங்கு', '100 நாட்கள் வேலைத்திட்டத்தில் எங்களையும் சேர்த்துக்கொள்', 'புறக்கணிக்காதே புறக்கணிக்காதே சுகாதார தொண்டர்களை புறக்கணிக்காதே' போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
பதாதைகளுடன் ஊர்வலமாகச் சென்ற இவர்கள் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகத்தை சந்தித்து இது தொடர்பில் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
45 minute ago