2025 ஜூலை 14, திங்கட்கிழமை

31 இளைஞர்கள் விடுதலை

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா, நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரி புனர்வாழ்வு நிலையத்தில் பயிற்சி பெற்று வந்த முன்னாள் போராளிகள் 31பேர் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

வன்னியைச் சேர்ந்த இவ்விளைஞர்கள், கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா சென்ற போது பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்தவர்களாவர்.

இவர்கள் மீதான விசாரணைகள் பூர்த்தியான நிலையிலும் அவர்களுக்கான பயிற்சிகள் நிறைவடைந்த நிலையிலும் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .