2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

க.பொ.த (சா/த) பரீட்சைக்கு மன்னாரிலிருந்து 3,651 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எஸ்.ஜெனி)

இன்று ஆரம்பமான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு மன்னார் மாவட்டத்திலிருந்து 3,651 பரீட்சார்த்திகள்  தோற்றுவதாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஆபேல் ரெவ்வல் தெரிவித்தார்.


மன்னாரில் 32 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

மன்னார் மற்றும் மடு ஆகிய இரண்டு கல்வி வலயங்களினூடாக  பரீட்சைகள் நடைபெறுகிறது. இதன்படி மன்னார் கல்வி வலயத்தில் 25 பரீட்சை நிலையங்களில் 3020 பரீட்சார்த்திகளும் மடு கல்வி வலயத்தில் 07 பரீட்சை நிலையங்களில் 631 பரீட்சார்த்திகளும்  பரீட்சைக்குத் தோற்றுவதாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஆபேல் ரெவ்வல்  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X