Princiya Dixci / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொல்லாத மனிதர்களுக்கே சட்டங்களைக் கடுமையாகச் செலுத்த வேண்டியிருக்கின்றது.
மனசாட்சியுடன் நல்லபடி வாழ்பவர்கள், இயல்பாகவே சட்டங்களுக்குக் கௌரவத்தை அளித்து வருகின்றனர்.
எல்லோருமே நல்லவரானால் காவல்துறைக்கும் நீதிமன்றங்களுக்கும் வேலையே இருக்காது.
ஆனால், இன்று உலகம் முழுவதிலுமே அராஜகம், வன்முறைகள் மலிந்துவிட்டன. எனவே, கண்டிப்பாக நடந்து கொள்வது நீதித்துறையினரதும், காவல் துறையினரதும் பொறுப்புமாகும்.
ஒழுக்கத்துடன் வாழ்வது சுலபமான விடயம் என்பதை உணராமையினாலேயே, உலகில் தவறுகள் நிறைந்துவிட்டன. குறைகள், தவறுகள் செய்தல் மானுட இயல்பு இதனை உணர்ந்து இயங்குவதே சிறப்பு. இதுவே, வாழ்வில் நிறைமாந்தராவதற்கான வழியுமாகும்.
எல்லோருமே சந்தோஷமாக இருக்க வேண்டுமென எண்ணினாலேபோதும் கண்ணியத்துடன் இயங்கும் குணம் வந்துவிடும்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
37 minute ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
9 hours ago
05 Nov 2025