2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஹெரோயின் பொதியுடன் பெண் கைது

Menaka Mookandi   / 2015 ஜூன் 17 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோத ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில், கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவினரால் நேற்று செவ்வாய்கிழமை (16) பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை ஒன்றின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலத்துறை, 75ஆம் தோட்டத்தில் வைத்தே மேற்படி பெண்ணை கைது செய்ததாகவும் அவரிடம் இருந்து 11 கிராம் 660 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் பொதியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அப்பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .