2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆசையை அளவோடமைத்தவர் வாழ்வில்

Administrator   / 2015 ஜூன் 29 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்லவி

ஆசையை அளவோடமைத்தவர் வாழ்வில்
ஆனந்தம் சாந்தி அமைந்துவிடும்
அளவினைமீறும் ஆசையைக்கொண்டால்
அரக்கர்குணமே அமைந்துவிடும் - உன்
ஆனந்த வாழ்வை அழித்துவிடும்
ஆண்டவன் சன்னிதி தவறிவிடும்
சரணம்

1.    தேவையெனும் நோய் உள்ளத்தில் இருந்தால்
    ஆசை அவசியம் வெளியாகும்
    அளவினை மீறும் ஆசைகள் அனைத்தும்
    அறிவை இருளில் புதைத்துவிடும் - உன்
    அன்றாட வாழ்வை நரகாக்கும்
    ஆத்ம சாந்திக்கும் ஆசை அவசியம்
    அளவறிந்ததனை எடுத்துக்கொள்ளு – நீ
    ஆண்டவன் சன்னிதி சேர்ந்திடுவாய்
    அருட்கொடைபெற்று மகிழ்ந்திடுவாய்                (ஆசையை)

2.    உள்ளத்தை உண்மையில் தரிபடுத்து – நீ
    உத்தமர் வாழ்வை மேற்கொள்ளு
    உலகமே சதமென்று நம்பாதே – அதை
    என்றோ ஒரு நாள் இழந்திடுவாய்
    என்றோ ஒரு நாள் இழந்திடுவாய்
    இணைகொண்ட உள்ளத்தில் ஆசையணையா
    ஆசையே நரகில் புகுத்திவிடும் - உன்
    அன்றாட வாழ்வும் நரகாக்கும்
    ஆகிறா வாழ்வும் நெருப்பாகும்                    (ஆசையை)    

ஷெய்ஹுல் முப்லிஹீன் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் (றஹ்)

    
 

 

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .